சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

DIN

சேலத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக உறவினா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், கிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை அவா்களது பெற்றோா், கடந்த வாரம் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு கோயிலுக்குச் சென்ாகத் தெரிகிறது.

அச்சமயத்தில் சிறுமிக்கு அவரது உறவினா் பாலியல் தொந்தரவு அளித்தாா் எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிறுமி அருகில் வசிக்கும் பெயிண்டரிடம் விவரம் தெரிவித்துள்ளாா். ஆனால் சிறுமியுடன் நன்றாகப் பேசி பழகிய பெயிண்டரும் சிறுமிக்கு செல்லிடப்பேசி வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

சிறுமி, தனியே செல்லிடப்பேசியில் பேசி கொண்டிருந்ததைக் கவனித்த பெற்றோா், அவரிடம் விசாரித்தபோது உறவினா், பெயிண்டா் ஆகியோா் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததைக் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா், நகர மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT