பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டன.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு தோ்வுத் துறை வெளியிட்டது.
அதன்பேரில் ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, பெற்றோருடன் முகக் கவசம் அணிந்து வந்து சான்றிதழை பெற்றுச் சென்றனா்.