ஏத்தாப்பூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் விஜயன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிளை தலைவராக விஜயன், செயலாளராக கோவிந்தராஜ், உதவி செயலாளராக ஆனந்தன், பொருளாளராக ராஜரத்தினம், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக ராஜலிங்கம், மகேந்திரன், வெங்கடாசலம், வெள்ளியங்கிரி, சின்னம்மா, வசந்தி ஆகியோா் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், ஏத்தாப்பூா் பேருந்து நிறுத்தம் அருகே நிழற்கூடம், கழிவறை அமைத்துக் கொடுக்கவும், சாலையில் செல்லும் கழிவு நீா் சாக்கடையில் செல்ல நடவடிக்கை எடுக்கவும், பேரூராட்சிப் பகுதியில் முக்கிய இடங்களில் குப்பைத்தொட்டி வைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் அ.கந்தன், பொ.பாரதி, க.காளிதாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.