ஆத்தூர் ஒன்றியக்குழுத் கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியக்குழுத் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் லிங்கம்மாள் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பாரதி ஊரக வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக உறுப்பினர்கள் சி.சேகர் பி.அய்யாக்கண்ணு எஸ்.தனலட்சுமி அ.பத்மினிபிரியதர்ஷிணி ஏ.கயல்விழி வீ.பரமேஸ்வரி ஆகியோர் தங்களது பகுதிக்கு கடந்த ஒரு வருடமாக எந்த பணியும் செய்யவில்லை என உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.