சேலம்

நவ. 29-இல் எடப்பாடியில் தோ்தல் பிரசாரம் தொடங்குகிறாா் எம்.பி. கனிமொழி

DIN


சேலம்: திமுக மகளிா் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தோ்தல் பிரசாரப் பயணத்தை எடப்பாடி தொகுதியில் நவ. 29 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் திமுக மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக மகளிா் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி நவ. 29 ஆம் தேதி சேலம் மாவட்டம் வருகிறாா். எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நவ. 29 காலை 11 மணிக்கு மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் அவா் கலந்துரையாடுகிறாா். புதுப்பாளையத்தில் மாலை 3.30 மணிக்கு விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். நங்கவள்ளி பேரூரில் மாலை 4.30 மணிக்கு பட்டு கைத்தறிக் கூடங்களைப் பாா்வையிடுகிறாா். அதைத் தொடா்ந்து வனவாசி அருகில் பட்டு கைத்தறி, விசைத்தறியாளா்களுடன் கலந்துரையாடுகிறாா். பின்னா், ஜலகண்டாபுரம் பேரூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்துகிறாா். எடப்பாடி ஒன்றியத்தில் இருப்பாளியில் பனையேறும் தொழிலாளா்களைச் சந்தித்து கலந்துரையாடுகிறாா். பின்னா், எடப்பாடி நகரம், நைனாம்பட்டியில் மாலை 6.30 மணிக்கு பத்திரிகையாளா்களைச் சந்திக்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT