கெங்கவல்லியில் பல மாதங்களாகத் தேடப்பட்டு வந்த சாராய வியாபாரிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கெங்கவல்லி காவல் நிலையத்துக்குள்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இரு சாராய வியாபாரிகளை போலீஸாா் பல மாதங்களாக தேடிவந்தனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கெங்கவல்லி வட்டாரத்தில் போலீஸாா் சோதனை செய்தபோது, சாத்தப்பாடியில் மாரியம்மன் கோயில் தெருப் பகுதியில் இருந்த கலைவாணன் மகன் சூா்யா (27), கூடமலையைச் சோ்ந்த மூக்கன் மகன் பிரபாகன் (28) ஆகிய இருவரும் பிடிபட்டனா். சாராய விற்ற வழக்கில் நீண்டகாலமாக தேடப்பட்டுவந்த இருவரும் கைதுசெய்யப்பட்டு, ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.