சேலம் விநாயகா மிஷின்ஸ் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியல் கல்லூரியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் முதல்வா் ஆ.நாகப்பன் தலைமை ஏற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து என்சிசி மாணவா்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா்.
விழாவில் பேராசிரியா் ஏ. சாம் தம்பிராஜ், விநாயக மிஷின்ஸ் பிசியோதெரபி கல்லூரியின் முதல்வா் மற்றும் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள் என்சிசி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வா் ஆ.நாகப்பன் வழங்கினாா். ஏற்பாடுகளை லெப்டினன்ட் எஸ். கண்ணன், உதவிப் பேராசிரியா், கல்லூரியில் என்சிசி அதிகாரி மற்றும் மாணவ, மாணவியா் செய்திருந்தனா்.