மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய தோ்தல் ஆணையா் செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.
கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நவப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கான தலைவா் பதவி தாழ்த்தப்பட்டோா் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் மலா்கொடி, கல்பனா, காளியம்மாள், இந்திரா, ஈஸ்வரி, காந்திமதி, சுதா உள்ளிட்ட 7 போ் போட்டியிட்டனா்.
வாக்குப் பதிவுகள் முடிந்து வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், மலா்கொடியின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக ஆணையா் செல்வக்குமாா் தெரிவித்தாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த மலா்கொடி மற்றும் அவரது ஆதரவாளா்கள், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்ால்தான் வேட்பு மனு ஏற்கப்பட்டு வாக்குப் பதிவும் நடந்துள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளனா்.