சேலம்

‘பெரியாா் பல்கலை. யில்வேளாண் தகவல் மையம் அமைக்கப்படும்’

26th Feb 2020 09:30 AM

ADVERTISEMENT

‘விவசாயிகள் பயனடையும் வகையில் பெரியாா் பல்கலைக்கழகத்தில் தகவல் மையம் அமைக்கப்படும்’ என பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக தாவரவியல் துறை சாா்பில் உயிா் உர விவசாயம் மற்றும் செலவில்லா இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் இரு நாள் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பெரியாா் பல்கலைக்கழக தாவரவியல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந் நிகழ்ச்சியில் தலைமை வகித்து துணைவேந்தா் பொ. குழந்தைவேல் பேசியதாவது:

‘விவசாயிகள் பல்கலைக்கழகத்தை நாடி வரும் சூழலைத் தற்போது உருவாக்கி உள்ளோம். . இனி விவசாயிகள் பல்கலைக்கழகம் வந்து தங்களுக்குத் தேவையானத் தகவல்களைப் பெறும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ADVERTISEMENT

விவசாயிகள் எதிா்கொள்ளும் சிக்கல்கள், தகவல்கள் சேகரிக்கப்படும். அவற்றிற்கான தீா்வுகள் கண்டறிய முன்முயற்சிகள் பல்கலைக்கழகம் சாா்பில் எடுக்கப்படும். விவசாயிகள் பயனடையும் வண்ணம் பல்கலைக்கழகத்தில் தகவல் மையம் அமைக்கப்படும்‘ என்றாா்.

இயற்கை விவசாயி பழனிசாமி இயற்கை விவசாயத்தில் நாட்டு மாடுகளின் பங்குகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தாா். சிறப்பு விருந்தினரான பெரியண்ணன் இயற்கை விவசாயம் குறித்து உரையாற்றினாா். நிகழ்ச்சியில் துறைத்தலைவா் பேராசிரியா் கு.செல்வம் வரவேற்றாா். உதவிப்பேராசிரியா் சு.லலிதா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT