சேலம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டுகிறது

DIN


மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டுகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தாலும், அணையின் நீா்மட்டம் மெல்ல உயா்ந்து வருகிறது.

மேட்டூா் அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 101.88 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,119 கன அடியிலிருந்து 5,957 கன அடியாகச் சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 67.29 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT