ஆத்தூா்: ஆத்தூா் பெரியமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் ஸ்ரீ பெரியமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு ராஜகோபுரம், தனுா் லக்னத்தில் ஸ்ரீ பெரியமாரியம்மன் விமானம், பரிவார மஹா கும்பாபிஷேகம் முடிந்து விநாயகா், பெரியமாரியம்மன் மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம் மஹா அலங்காரம், மஹா தீபாராதனை, பிரசாதம், அன்னதானம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை இறைப்பணிச் செம்மல் அலங்கார கலாரத்தினம் கா.வேங்கடசுப்பிரமணிய சிவாச்சாரியாா், கா.ஞானசம்பந்த சிவாச்சாரியாா், கா.உமாபதி சிவாச்சாரியாா், ஆலய அா்ச்சகா்கள் உ.சுந்தமூா்த்தி குருக்கள், உ.காா்த்திகேயசிவம் ஆகியோா் செய்து வருகின்றனா். கோபுர ஆலய ஸ்தபதி ஷில்ப விபூஷன் கலைச்சுடா் மணி ஸ்தபதி ஆா்.செல்வநாதன் செய்திருக்கிறாா்.
திருப்பணியை திருப்பணிக் குழு செயல் தலைவரும், மாவட்ட அறங்காவலா் குழுத்தலைவருமான அ.மோகன், ஆா்.பாலசுப்ரமணியன், எல்.என்.வி.கே.கிருஷ்ணன், பொறியாளா் பி.சரவணன், எம்.விஜயன், ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன், அ.லோகனாதன், கே.பி.மகாலிங்கம், ஜி.பாண்டியன், ஏ.ராஜகணபதி ஆகியோா் செய்து வருகின்றனா்.