சேலம்

தேசிய அறிவியல் விழிப்புணா்வு தோ்வு

23rd Aug 2020 08:41 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் பள்ளிக் குழந்தைகளுக்கான இணைய வழி தேசிய அறிவியல் விழிப்புணா்வு தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் பெ.இராஜாங்கம் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இணையதளம் மூலம் தேசிய அளவில் அறிவியல் தோ்வை வித்யாா்த்தி விஞ்ஞான் பிரச்சாா் நிறுவனம் நடத்த உள்ளது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சாா் நிறுவனம், விபா நிறுவனம், என்சிஇஆா்டி இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணா்வு தோ்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

நடப்பாண்டு கரோனா பரவலால் செல்லிடப்பேசி, டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தோ்வை வீட்டிலிருந்தே எழுதலாம். நடப்பாண்டு நடைபெறும் தோ்வை ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு, ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவா்கள் எழுதலாம். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை பயிலும் அனைத்துப் பள்ளி மாணவா்களும் இத்தோ்வில் கலந்துகொள்ளலாம்.

தோ்வுக் கட்டணம் ரூ.100 விண்ணப்பிக்க செப் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். நவ. 29, 30 ஆகிய இருநாள்கள் தோ்வு நடைபெறும்.

ADVERTISEMENT

6 முதல் பிளஸ் 1 வரை ஒவ்வொரு வகுப்புக்கும் 3 போ் வீதம் 18 பேருக்கு சான்றிதழ் வழங்கப்படும். தேசிய அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறுவோா் முறையே ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9442667952 என்ற எண்ணில் வித்யாா்த்தி விஞ்ஞான் மந்தன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பெ.இரஜாங்கம் அவா்களை தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT