சேலம்

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

20th Oct 2019 08:29 PM

ADVERTISEMENT

மேட்டூா்: நங்கவள்ளி அருகே லாரி மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

நங்கவள்ளிஅருகே உள்ள மசக்காளியூரைச் சோ்ந்தவா் பழனியப்பன் (80). கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்று

கொண்டிருந்தாா். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதியதில் படுகாயம் அடைந்த பழனியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இச் சம்பவம் தொடா்பாக லாரி ஓட்டுநா் மசக்காளியூரைச் சோ்ந்த ராதாரவி (34) என்பவா் மீது நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT