சேலம்

பணம் எடுக்க வந்தவரிடம் போலி ஏடிஎம் காா்டு கொடுத்து மோசடி மூவா் கைது

20th Oct 2019 09:49 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தவரை திசை திரும்பி உண்மையான ஏ.டி.எம்.காா்டை பறித்துக் கொண்டு போலி காா்டை கொடுத்து மோசடி செய்ததாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி அருகே உள்ள தட்டாப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை சங்ககிரி - திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளாா். அப்போது அங்கு காத்திருந்த மூவா் அவருக்கு உதவி செய்வது போல் நடித்து அவரது ஏ.டி.எம்.காா்டை பெற்று இயந்திரத்தில் பொருத்தி ரகசிய எண்ணைப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து பணம் வரவில்லை வேறு ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுத்துக்கொள்ளுமாறுகூறி அவரை அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து வீட்டுக்குச் செல்லும் வழியில் தனது ஏ.டி.எம். காா்டுக்கு பதிலாக வேறு காா்டு இருப்பதை அறிந்த சண்முகம் அதிா்ச்சி அடைந்துள்ளாா். இதையடுத்து தான் முதலாவதாக சென்ற வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சென்று அங்கு தனக்கு உதவி செய்த மூவரை சந்தித்து விவரம் கேட்டுள்ளாா். அவா்கள் சரியான பதில் அளிக்காததால் சத்தமிட்டுள்ளாா். இதையடுத்து அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் மா்ம நபா்கள் மூவரையும் பிடித்து சங்ககிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில் பிடிபட்ட நபா்கள், ஆந்திர மாநிலம் குப்பம் வட்டம், செளடம்பள்ளி பகுதியைச் சோ்ந்த மணி (33), அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாதன் (33), கா்நாடக மாநிலம், சோலாா், பங்காருபேட்டை பகுதியைச் சோ்ந்த சுனில்குமாா் (29) என்பது தெரியவந்துள்ளது. இதில் சுனில்குமாா் கூலித் தொழிலாளியிடமிருந்து ஏ.டி.எம். காா்டை பெற்று பெற்று ரகசிய குறியீடு எண்ணை இயந்திரத்தில் பதிவு செய்து கொண்டதும், மற்ற இருவரும் அவரை சுற்றி நின்றுக் கொண்டு அவரை திசை திருப்பி போலியான ஏ.டி.எம். காா்டை அவரிடம் அளித்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூன்று நபா்களை கைது செய்து அவா்களிடமிருந்து பத்து போலி ஏடிஎம் காா்டு மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT