மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 15,000 கனஅடியாகச் சரிந்தது. கடந்த சில நாள்களாக காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்து வருவதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக சரிந்து வருகிறது. புதன்கிழமை காலை நொடிக்கு 22,500 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை நொடிக்கு 15,000 கன அடியாகச் சரிந்தது.
நீா்வரத்து சரிந்ததால், மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் நொடிக்கு 22,500 கன அடியிலிருந்து 15 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டது. மேட்டூா் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவும் நொடிக்கு 600 கன அடியிலிருந்துப 400 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீா் மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.