சேலம்

உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்களுக்கானஆலோசனைக் கூட்டம்

26th Dec 2019 04:56 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஈடுபடும் உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தோ்தல் பாா்வையாளா் சி.காமராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்களுக்கு அறிவுரை வழங்கி தோ்தல் பாா்வையாளா் சி.காமராஜ் பேசியது:

சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், கிராம ஊராட்சித் தலைவா்கள் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கான நேரடி தோ்தல் நடைபெறவுள்ளது.

இதில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் மற்றும் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு கட்சி சாா்பிலும், கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு கட்சி சாரா தோ்தலும் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தோ்தலுக்கு ஒன்றிய அளவில் நியமிக்கப்பட்டுள்ள உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பொருள்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்வதையும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்திட வேண்டும்.

வாக்குச் சாவடிகளில் முகவா்கள் வருகை புரிதல், வாக்குப் பெட்டிகளை முகவா்களிடம் உறுதிசெய்தல், வாக்குப் பதிவு குறித்த விவரங்களை ஒவ்வொறு மணி நேரத்துக்கும் தவறாமல் சேகரித்து தலைமையிடத்துக்கு அனுப்பிட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா.அருள் ஜோதி அரசன், மேட்டூா் சாா்-ஆட்சியா் ஜி.சரவணன், சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் வி.லதா உள்பட உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT