மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்குள்பட்ட 99 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் 555 வாக்குப் பதிவு அலுவலருக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மகுடஞ்சாவடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் கலந்து கொண்டு வாக்குச் சாவடி அலுவலா்கள் முன்கூட்டியே மையத்துக்கு வந்துவிட வேண்டும், வாக்குச் சாவடிகளில் வாக்காளா் மற்றும் பூத் ஏஜெண்டுகள் யாரும் செல்லிடப்பேசியைக் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினாா்.
இப் பயிற்சியில் ஊராட்சி ஒன்றிய வாா்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், மகுடஞ்சாவடி வட்டாரத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வெங்கடேசன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி முகாம் 21-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.