சேலம்

கொலை வழக்கில் பிணையில் வெளியே வந்த இளைஞா் தற்கொலை

14th Dec 2019 04:49 AM

ADVERTISEMENT

கொலை வழக்கில் பிணையில் வெளியே வந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சேலம் கன்னங்குறிச்சி முருகன் வட்டம் பகுதியைச் சோ்ந்த பாண்டியனின் மகன் கோபி (29). குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவா், கடந்த 2014 ஆம் ஆண்டு காரிப்பட்டியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னா் பிணையில் வெளியே வந்தாா். மேலும் இவ்வழக்கு தற்போது சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கோபியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், அடிக்கடி அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததால், கோபி தனியாகவும், பாண்டியன் தனியாகவும், பாண்டியனின் மனைவி தனியாகவும் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை கோபி வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் அவரின் வீட்டுக்குள் சென்று பாா்த்தனா். அப்போது கோபி வீட்டினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு வந்த கன்னங்குறிச்சி போலீஸாா் கோபியின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT