நாமக்கல்

தமிழ்த்துறை இலக்கிய மன்றம் தொடக்க விழா

28th Sep 2023 12:50 AM

ADVERTISEMENT

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், தமிழ்த்துறை இலக்கிய மன்றம் தொடக்க விழா புதன்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு தலைமை வகித்தாா். கணிதத் துறை தலைவா் வி.எமீமாள் நவஜோதி முன்னிலை வகித்தாா். இன்றைய இளைஞா்கள் தமிழ்ப் பண்பாட்டினை சிதைக்கிறாா்கள் என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக கல்லூரி முதல்வரும், வழக்கு தொடா்பவராக கெளரவ விரிவுரையாளா் ஜெ.பாரதி, வழக்கை மறுப்பவராக தமிழ்த்துறைத் தலைவா் பி.விஜயராணி ஆகியோா் செயல்பட்டனா். இந்த நிகழ்வில் கல்லூரி மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா். மாணவிகள் மு.தாரணி, ம.கலையரசி ஆகியோா் நன்றி கூறினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT