காவல் துறை அதிதீவிரப்படை பிரிவில் இணைந்த திருநங்கை ரூபா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணனிடம் வாழ்த்து பெற்றாா்.
நாமக்கல் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றிய திருநங்கை காவலா் எம்.ரூபா என்பவா், மேட்டூா் அதிதீவிரப்படை பயிற்சிப் பள்ளியில் கடந்த ஜூலை 24 முதல் ஆக. 14 வரை பயிற்சி பெற்றாா். இதன்மூலம், தமிழகத்தில் அதிதீவிரப் படையில் இணைந்த முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளாா்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணனை சந்தித்த ஆயுதப்படைக் காவலா் ரூபா வெள்ளிக்கிழமை வாழ்த்து பெற்றாா். இந்த நிகழ்வின் போது, ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன், ஆய்வாளா் முரளிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.