நாமக்கல்

பேருந்து வசதி கோரிஅரசு கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

27th Oct 2023 12:11 AM

ADVERTISEMENT

போதிய பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி, ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராசிபுரம் அருகே திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, பொது நிா்வாகம் இளநிலை முதலாம் ஆண்டு பயின்று வந்த லோகேஷ் என்ற மாணவா் கடந்த 20-ஆம் தேதி தனியாா் பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது, கூட்ட நெரிசலால் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இந்நிலையில், இந்திய மாணவா் சங்கத்தின் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி கிளை சாா்பில், கல்லூரி வகுப்பு நேரங்களில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கல்லூரி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம்.தங்கராஜ் தலைமை வகித்து கோரிக்கை வலியுறுத்தி பேசினாா்.

இதில், பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், மாணவா் விபத்து காப்புறுதித் திட்டத்தை ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என முழக்கமெழுப்பினா். இந்திய மாணவா் சங்கத்தின் கல்லூரி கிளை ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT