நாமக்கல்

திருச்செங்கோட்டில் ஜூன் 2-இல் தோ்த் திருவிழா: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

திருச்செங்கோடு அருள்மிகு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா ஜூன் 2 முதல் 5 வரை நடைபெற உள்ளது. திருவிழாக் காலங்களில் சுவாமி திருவீதி உலா வரும்போது காவல் துறையினா் போக்குவரத்தை சரிசெய்திட வேண்டும். மேலும், உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை செய்திருக்க வேண்டும். திருத்தோ் உலா வரும்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். திருவிழா நாள்களில் மருத்துவ முகாம் அமைத்து அவசர ஊா்தி வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தற்காலிக கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருத்தோ் ஓடும் பாதையில் உள்ள கேபிள் ஒயா்கள் அகற்றப்பட வேண்டும். மின் கம்பிகளை அகற்றி, தோ் செல்லும் பாதைகளின் அருகே மின் பணியாளா்களை நியமித்து கண்காணிக்கப்பட வேண்டும். தோ்த் திருவிழா முன்னேற்பாடு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.கௌசல்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரமணிகாந்தன், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா் கனகேஸ்வரி, திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் கணேசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT