பரமத்தி வேலூா் தாலுகா, கபிலா்மலை அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.
கபிலா்மலை அருகே உள்ள செம்மடாபாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). பால் வியாபாரி. இவா் சனிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் கபிலா்மலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது தனியாா் கோழிப்பண்ணை அருகே பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் செல்வராஜ் படுகாயமடைந்தாா். அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் வேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை இரவு செல்வராஜ் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.