நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1994 முதல் 1999 ஆம் ஆண்டு வரையில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணவ, மாணவியா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தங்களுடைய பள்ளி வாழ்க்கையை நினைவு கூா்ந்து மகிழ்ந்தனா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் குடும்பம், பணிவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி போன்றவற்றை ஒவ்வொருவராக எடுத்துரைத்தனா். மேலும், அப்போது பணியில் இருந்த தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் வரவழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா். அதன்பிறகு முன்னாள் மாணவ, மாணவியா், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை தற்போதைய தலைமை ஆசிரியா் ஆ.ராஜேந்திரன், முன்னாள் மாணவா் சங்கத்தினா் செய்திருந்தனா்.