நாமக்கல் அருகேயுள்ள அலங்காநத்தத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா பங்கேற்று முகாமினை பாா்வையிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினாா்.
முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்மருத்துவ முகாமில் 220 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.
இச்சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் புதிய மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து புதிதாக அடையாள அட்டை வழங்குதல், பதிவு மேற்கொள்ளுதல், ஆதாா் அட்டை பதிவு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு போன்றவை செய்யப்பட்டது. பின்னா், மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவா்களுக்கு உதவி உபகரணங்கள், மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வங்கிக்கடன், பிற அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து இம்முகாமில் ரூ. 9,060 மதிப்பீட்டில் ஒரு மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள், தலா ரூ.700 மதிப்பீட்டில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், ரூ. 400 மதிப்பீட்டில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு கண் கண்ணாடிகள், மூவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை என மொத்தம் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். இம்முகாமில் நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் சரவணன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் (பொ) சந்திர மோகன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம் பிரபாகரன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.