நாமக்கல்

திருச்செங்கோட்டில் கண்ணகி விழா

DIN

திருச்செங்கோட்டில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவை முன்னிட்டு 66ஆம் ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதா் கோயில் சொக்கப்ப முதலியாா் அரங்கத்தில் ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது.

விழாவிற்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா், கண்ணகி விழாக்குழு தலைவா்.ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், திமுக செயற்குழு உறுப்பினா். ஆா்.நடேசன், திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளா் சிங்காரவேல், பி.ஆா்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநா் பரந்தாமன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.

அனைவரின் பேச்சிலும் திருச்செங்கோடு மலையில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்தனா். விரைவில் கண்ணகி கோட்டம் அமைக்கப்படும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா். விழாவில் நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடியவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து, முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் கோல்டன் ஹாா்ஸ் ரவி, தென்னிந்திய மோட்டாா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் அனி தா வேலு, திருச்செங்கோடு லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் மூா்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமை யாளா்கள் சங்கத் தலைவா் லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளா் நதி ராஜவேல் வரவேற்றுப் பேசினாா். நகர செயலாளா் அசோக் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT