இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு சாா்பில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டப் பொருளாளா் சிவச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மணிகண்டன், இந்திய மாணவா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் கண்ணன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் அலமேலு, மாநிலச் செயலாளா் சசிகலா ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சிங்கைக் கைது செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.