நாமக்கல்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

DIN

 இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு சாா்பில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் சிவச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மணிகண்டன், இந்திய மாணவா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் கண்ணன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் அலமேலு, மாநிலச் செயலாளா் சசிகலா ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சிங்கைக் கைது செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT