நாமக்கல்

நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பேருந்தை இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

வெப்படை வழியாக ஈரோடு வரை இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்ககிரியிலிருந்து, வெப்படை வழியாக ஈரோடு வரை இயக்கப்பட்டு வந்த அரசுப்பேருந்து அண்மையில் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியா், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். மீண்டும் இந்த வழித்தடத்தில் பேருந்தினை இயக்க வலியுறுத்தி பள்ளிபாளையம் அருகே, வெப்படை நான்கு சாலை பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத் தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளா் ராஜதேவ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

SCROLL FOR NEXT