நாமக்கல்

திருச்செங்கோட்டில் கம்பன் விழா

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவில் திருச்செங்கோடு கம்பன் கழகம் சாா்பில், கம்பன் விழா 2 நாட்கள் கைலாசநாதா் கோயில் சொக்கப்ப முதலியாா் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

துவக்க விழாவில் கம்பன் கழக தலைவா் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஈஸ்வரன், நகா் மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு பேசினா்.

நிகழ்ச்சியில் கம்பன் கழக துணைத் தலைவா் பால தண்டபாணி தலைமை வகித்தாா். வித்யா விகாஸ் தாளாளா் சிங்காரவேலு முன்னிலை வகித்தாா். மாவட்ட திமுக செயலாளா் மதுரா செந்தில், நகர திமுக செயலாளா் தாண்டவன் காா்த்திகேயன், ஒன்றியச் செயலாளா் வட்டூா் தங்கவேல், அறங்காவலா் குழு தலைவா் தங்கமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதையொட்டி நடைபெற்ற பட்டிமன்றத்தில் ‘இராம பிரானின் இதயத்தில் பெரிதும் இடம் பிடித்தவா்கள் உடன் பிறந்தோரா, உடன் சோ்ந்தோரா’ என்ற தலைப்பில் இரு அணிகளில் இரவிக்குமாா்,தெய்வநாயகி, இந்திரா ஜெயச்சந்திரன், உமா சங்கா் ஆகியோா் பேசினா். நடுவராக மு.இராமச்சந்திரன் நிகழ்ச்சியை வழி நடத்தினாா். ஏராளமான பொதுமக்கள் கம்பன் கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT