சேந்தமங்கலத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் 186 பயனாளிகளுக்கு ரூ. 52.86 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிறைவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 186 பயனாளிகளுக்கு ரூ. 52,86,500- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்டம் (தனித்துணை ஆட்சியா்) பிரபாகரன், சேந்தமங்கலம் வட்டாட்சியா் செந்தில், வட்டாட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அப்பன் ராஜ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சி.மணிமாலா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பெரியசாமி, சேந்தமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், சுகிதா, அரசுத் துறையினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.