நாமக்கல்லில், புதிய தமிழகம் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். இதில், அரசு மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். கள்ளச்சாராய மரணத்தில் இறந்தோருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். சிபிஐயிடம் கள்ளச்சாராய மரண வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.--