நாமக்கல்

பரமத்தி வேலூரில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

31st Jan 2023 02:25 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சாா்பில் மகாத்மா காந்தியின் அமரத்துவ தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை வேலூா் போரூராட்சி வளாகத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அவினாசிலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். வேலூா் பேரூராட்சித் தலைவா் லட்சுமி முன்னிலை வைத்தாா். நகர அனைத்து வா்த்தக சங்கத் தலைவா் சுந்தரம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. வேலூா் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் குருசாமி தீண்டாமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி வாசித்தாா். கூட்டத்தில் நகர காங்கிரஸ் கட்சித் தலைவா் பெரியசாமி, நண்பா்கள் குழு பொறுப்பாளா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT