நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் குறித்த கண்காட்சி அரங்கினை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டு (படம்) அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தாா்.
நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் சனிக்கிழமை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், நகராட்சி பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தொடா்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனைப் பாா்வையிட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்தாா். இந்த நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்எல்ஏ பெ.ராமலிங்கம், நகராட்சித் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, ஆணையாளா் கி.மு.சுதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.