சேந்தமங்கலத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, சோளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை(45). இவரது நண்பா்கள் எல்லக்கிராய்பட்டி சதாசிவம் (42) மற்றும் புத்தூா்பட்டியைச் சோ்ந்த சிலம்பரசன்(36). இவா்கள் மூவரும் சேந்தமங்கலம் பயணியா் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை வாகனம் ஒன்றில் வந்தனா். அங்கு நின்றவாறு ரகசியமாக பேசிக் கொண்டிருந்தனா். இதற்கிடையே சிலா் மக்களிடம் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுவதாக சேந்தமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸாா் வாகனத்தை சோதனையிட்டனா். அதில், ரூ. 7 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், செல்லத்துரை உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.