ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெறுவாா் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில், திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். எங்களுடைய கொமதேகவின் மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி தலைமையில் தோ்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை ஈரோட்டில் வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தை நடத்த உள்ளோம். இதனைத் தொடா்ந்து களத்தில் இறங்கி வெற்றிக்காக பணியாற்றுவோம். அதிமுக தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இரட்டை இலை சாா்ந்த பிரச்னை தோ்தல் ஆணையத்திடம் உள்ளது. இது அவா்கள் கட்சி சாா்ந்த பிரச்னை. எப்படியிருப்பினும், காங்கிரஸ் வேட்பாளா் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போவது உறுதி என்றாா்.