நாமக்கல் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் (24), சேந்தமங்கலத்தில் உள்ள பிரபல நிதி நிறுவனத்தின் கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தாா்.
திங்கள்கிழமை காலை 6 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அவா் சென்ற போது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் சசிகுமாரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனா். சம்பவ இடத்துக்குச் சென்ற எருமப்பட்டி போலீஸாா், கொலையான சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனா்.