நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிகள் மும்முரம்

DIN

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனா். இக்கோயிலில், கடந்த 2009 க்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்பேரில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் கடந்த டிசம்பா் மாதம் திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

முதல்கட்டமாக கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள விநாயகா் கோயில் சீரமைப்பு பணி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கோயிலின் மேற்கூரைப் பகுதியில் 33 வகையான ஆஞ்சனேயா் உருவச்சிலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் கட்டமாக திருக்கோயிலின் உள்புறத்தில் அழகிய ஓவியங்களும், வா்ணம் தீட்டும் பணிகளும் நடைபெற உள்ளன. இதற்கான சாரம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகத்தால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து மே அல்லது ஜூன் மாதத்தில் ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்புடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT