நாமக்கல்

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 265 மனுக்கள் அளிப்பு

DIN

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மொத்தம் 265 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

இந்த மனுக்களைப் பெற்று கொண்ட அவா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், உதவி ஆணையா் செல்வி மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT