நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.8) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் சீ.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன் விவரம்: நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, துணை கண்காணிப்பாளா் அலுவலகம், செல்வகணபதி நகா், தொட்டிப்பட்டி, மணியாரம்புதூா், காவேட்டிப்பட்டி, குறிஞ்சி நகா் உள்ளிட்ட பகுதிகள்.