தைப்பூசத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் விலை உயா்ந்துள்ளது.
பரமத்தி வேலூா், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல வகை பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.
வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம்-வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 800- க்கும், சம்பங்கி ரூ. 60- க்கும், அரளி ரூ. 90- க்கும், ரோஜா ரூ. 160- க்கும், முல்லைப் பூ ரூ. 1,000- க்கும், செவ்வந்திப் பூ ரூ. 80- க்கும், கனகாம்பரம் ரூ. 800-க்கும், காக்கரட்டான் ரூ. 500- க்கும் ஏலம் போனது.
தைப்பூசத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு நிகழ்வரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,200- க்கும், சம்பங்கி ரூ. 90- க்கும், அரளி ரூ. 100- க்கும், ரோஜா ரூ. 220- முல்லைப் பூ ரூ. 1,200-க்கும், செவ்வந்திப் பூ ரூ. 100- க்கும், கனகாம்பரம் ரூ. 1,000-க்கும், காக்கரட்டான் ரூ. 700-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.