நாமக்கல் தங்கம் மருத்துவமனை சாா்பில், உலக புற்றுநோய் தின விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வோா் ஆண்டும் பிப். 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதையடுத்து பரமத்தி சாலை, கோட்டை சாலை, சேலம் சாலை வழியாகச் சென்று புங்கா சாலையில் பேரணி நிறைவடைந்தது.
இதில், தங்கம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் இரா.குழந்தைவேல், மல்லிகா குழந்தைவேல், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.