நாமக்கல்

வேலூரில் சனிக்கிழமை வாரச் சந்தை

DIN

பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை இம்மாதம் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முன்னதாக சனிக்கிழமை நடைபெறும் என்று வேலூா் பேருராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பரமத்திவேலூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச் சந்தைக்கு பரமத்தி வேலூா், கரூா் மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் காய்கறிகள், மளிகைப் பொருள்கள், கருவாடு, பழங்கள், ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்கின்றனா்.

மோகனூா் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தையும் நடைபெற்று வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) தைப்பூசத் திருவிழா என்பதால் ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை (பிப். 4) வாரச்சந்தை நடைபெறும் என வேலூா் பேரூராட்சியினா் தகவல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT