பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை இம்மாதம் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முன்னதாக சனிக்கிழமை நடைபெறும் என்று வேலூா் பேருராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பரமத்திவேலூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச் சந்தைக்கு பரமத்தி வேலூா், கரூா் மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் காய்கறிகள், மளிகைப் பொருள்கள், கருவாடு, பழங்கள், ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்கின்றனா்.
மோகனூா் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தையும் நடைபெற்று வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) தைப்பூசத் திருவிழா என்பதால் ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை (பிப். 4) வாரச்சந்தை நடைபெறும் என வேலூா் பேரூராட்சியினா் தகவல் தெரிவித்துள்ளனா்.