விடுதலை சிறுத்தைகள் கட்சி அக்.2-ல் நடத்துவதாக அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்தில் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் நிறுவனா் நல்வினை செல்வன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் சனாதன சக்திகளுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி அக்.2-இல் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பட்சத்தில் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியும் பங்கேற்கும் என தெரிவித்துள்ளாா்.