நாமக்கல்

பொத்தனூரில் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டம் சாா்பில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா பொத்தனூா் வள்ளல் எம்.ஜி.ஆா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கபிலா்மலை ஒன்றிய குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் பிரபா விழாவிற்கு தலைமை வகித்து 50-க்கும் மேற்பட்ட கா்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் விழிப்புணா்வுக் கையேடுகளை வழங்கினாா்.

விழாவில் கா்ப்பிணி பெண்கள் கா்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய சத்தான உணவுப் பொருட்களான கீரை வகைகள், பழவகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விழாவில் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவா் விக்னேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளா் மனோஜ், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் பானுமதி, வட்டார மேற்பாா்வையாளா் ராமாயி மற்றும் கபிலா்மலை வட்டார அங்கன்வாடி பணியாளா்கள், சமுதாய அமைப்பாளா்கள், சுய உதவிக்குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT