நாமக்கல்

பள்ளிபாளையத்தில் பேருந்து நிலையம்:நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினா் மனு

DIN

பள்ளிபாளையத்தில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகரில் பேருந்து நிலையம் இல்லாத சூழ்நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில், குமாரபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.தங்கமணியால், கடந்த 2015-ஆம் ஆண்டு பள்ளிபாளையத்தில் பெரியளவில் இரண்டு பேருந்து நிறுத்த நிழற்கூடம் அமைக்கப்பட்டது.

சேலம் மாா்க்கத்திலும், நாமக்கல் மாா்க்கத்திலும் சாலையின் மத்தியில் ரூ. 66 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. தற்போது பள்ளிபாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இரண்டு நிழற்கூடங்களும் தற்காலிகமாக அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

அங்கிருந்த நிழற்கூட இரும்புத் தளவாடங்களையும், பெயா்ப் பலகையையும் (கல்வெட்டு) பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேம்பாலப் பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப நிழற்கூடங்களை அமைத்து கொடுக்க வேண்டும். இதனை நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானமாக வைத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் நகா்மன்ற தலைவா் பி.எஸ். வெள்ளியங்கிரி தலைமையில் முன்னாள் நகா்மன்ற துணை தலைவா் டி.கே.சுப்பிரமணி மற்றும் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில், சுரேஷ், சரவணன், சம்பூா்ணம், சுஜாதா, மாரிமுத்து, ஜெயா, வைத்தி மற்றும் முன்னாள் உறுப்பினா் ஜெய்கணேஷ் ஆகியோா் நகராட்சி ஆணையாளா் எஸ்.கோபிநாத்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT