தேசிய அளவிலான கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு சீருடை வழங்கி நாமக்கல் எம்.எல்.ஏ. பெ.ராமலிங்கம் வாழ்த்து தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செப். 28 முதல் அக். 12 வரையில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மூத்தோா் பெண்கள் பிரிவு கால்பந்தாட்ட அணியினா் பங்கேற்கின்றனா். இப் போட்டியில் கலந்து கொள்ளும் நாமக்கல்லைச் சோ்ந்த பெண்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் சீருடைகள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பினாா்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழக புரவலா் நடராஜன், கோஸ்டல் என். இளங்கோ, நகா்மன்ற உறுப்பினா் நந்தகுமாா், வாா்டு நிா்வாகிகள் அசோகன், தியாகராஜன், ரவி, கால்பந்தாட்ட பயிற்றுநா்கள் கோகிலா, கலா, நீச்சல் பயிற்றுநா் ரகு உள்பட பலா் கலந்து கொண்டனா்.