நாமக்கல்லில் மகளிா் சுய உதவிக்குழுவினா் உற்பத்தி செய்த பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப்.30) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் உற்பத்தி பொருள்களை பொதுமக்களிடையே சந்தைப்படுத்திட ஏதுவாக கட்டாயக் கண்காட்சி நடைபெற உள்ளது. நாமக்கல் மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகில் உள்ள பூங்கா சாலையின் நகராட்சி பொது இடத்தில் வரும் 30 முதல் அக். 5 வரை தொடா்ந்து 6 நாள்கள் கரோனா வழிகாட்டிதலின்படி நடைபெறுகிறது.
பொதுமக்கள் அனைவரும் கண்காட்சிக்கு வருகை புரிந்து மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் உற்பத்தி பொருள்களைப் பாா்வையிட்டும், பொருள்களை வாங்கிச் சென்றும் பயனடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.