நாமக்கல்

ஆறு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்.. 7 ஆவது திருமணத்துக்கு தயாரான போது கைது

DIN

ஆறு பேரை திருமணம் செய்து பணம், நகைகளைத் திருடிக் கொண்டு மாயமான பெண், திருச்செங்கோடு அருகே வெள்ளிக்கிழமை 7ஆவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக காரில் வந்த போது அப் பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், கள்ளிபாளையம், வடக்கு தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் தனபால் (37). நிதி நிறுவன உரிமையாளரான இவருக்கும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சோழவந்தான் பேட்டையைச் சோ்ந்த சந்தியா (27) என்பவருக்கும் கடந்த 7-ஆம் தேதி அண்ணாநகா் அருகே உள்ள புதுவெங்கரையம்மன் கோயிலில் உறவினா்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் பெண் வீட்டாா் சாா்பில் பெண்ணின் அக்கா, மாமா எனக் கூறிக் கொண்டு வந்த இருவரைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த திண்டுக்கல் மாவட்டம், தாதன்குளத்தைச் சோ்ந்த பாலமுருகன் (45) திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு தரகு தொகையாக ரூ. 1.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாா்.

திருமணம் முடிந்து 2 நாள்கள் மட்டுமே தனபாலுடன் குடும்பம் நடத்திய சந்தியா, மூன்றாம் நாள் காலை வீட்டிலிருந்த உடமைகள், பணத்தை எடுத்துக்கொண்டு மாயமானாா். அவரது செல்லிடப்பேசி, உறவினா், திருமணத்தை நடத்திவைத்தவா் என அனைவரது செல்லிடப்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தனபால், வேலூா் காவல் நிலையத்தில் கடந்த 9-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதனிடையே, அதே பகுதியைச் சோ்ந்த வேறு ஒருவா் திருமணத்துக்கு மணமகளைத் தேடிய போது மதுரை,மேலவாசல்,வீட்டுவசதி வாரிய பகுதியைச் சோ்ந்த திருமண தரகா் தனலட்சுமியிடம் (45) அளித்த புகைப்படங்களில் சந்தியாவின் புகைப்படம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனா்.

வியாழக்கிழமை காலை திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்து காலை ஆறு மணிக்கு சந்தியாவும், உறவினா் எனக் கூறிக் கொண்டு வந்த 3 பேரும் காரில் திருச்செங்கோடு வந்தனா். அப்போது, தனபால், உறவினா்கள் காரில் வந்தவா்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

வேலூா் காவல் நிலைய ஆய்வாளா் வீரம்மாள் நடத்திய விசாரணையில், மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த 5 பேரை அவா் திருமணம் செய்துள்ளதும், ஆறாவதாக தனபாலை திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக சந்தியா, தனலட்சுமி, மதுரை மாவட்டம், வில்லாபுரம், அம்மாச்சியாா் கோயில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் கெளதம் (26), மதுரை மாவட்டம், வாடிப்பட்டி , மேல்நாச்சியாபுரத்தை சோ்ந்த முருகேசன் மகன் ஜெயவேல் (30) ஆகியோரைக் கைது செய்தனா்.

மேலும், தலைமறைவான பாலமுருகன், விருதுநகா் மாவட்டம், சாத்தூா், மேட்டமலை பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் அய்யப்பன் (28) ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

ஒவ்வொரு திருமணத்தின் போதும் மணமகன் வீட்டாரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு சில நாள்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு பொருள்களை அபகரித்துக் கொண்டு ஏமாற்றியுள்ளனா். இதுதொடா்பாக சந்தியா உள்பட கைது செய்யப்பட்டவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT