நாமக்கல் மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஹெச்.ஜெயந்தி தலைமை வகித்தாா். இதில், தில்லி, பஞ்சாப் மாநிலங்களைப் போல், தமிழகத்திலும் அதிக அளவில் உறுப்பினா்களை சோ்த்து கட்சியின் தோ்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்; பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கதாக உள்ளதால், தமிழக அரசை ஆம் ஆத்மி பாராட்டுகிறது; உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும்; பொதுமக்களுக்கான அரசின் சேவைகளை எந்த நிலையிலும் நிறுத்தவோ, திரும்ப பெறுதலோக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.