தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் சனிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடக்கி வைத்தாா். இப்பேரணியானது, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி, டாக்டா் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாகச் சென்று நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட செவிலியா் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி சென்றனா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி மற்றும் மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.